Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபாவில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள குபேந்திர ரெட்டி(ஜே.டி.எஸ்.,), ஹரிபிரசாத்(ஜே.டி.எஸ்.,), ராஜூவ் கவுடா(காங்.,), பிரபாகர்(பா.ஜ.,) ஆகியோரின் பதவி காலம் வரும் ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைகிறது.
காலியாகும் இந்த 4 இடங்களுக்கு, முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., கட்சி தலைவருமான தேவ கவுடா, காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த அசோக் கஸ்தி, ரான் கடாடி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.